விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு – கவுதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து ஒன்றாக பணிபுரிந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஆகையால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்து உள்ளன.இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில் […]
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள காய்கனி மார்க்கெட் சிக்னல் அருகே உள்ளஅண்ணாவின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றததூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. […]
கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா 114வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள பொ.தமிழரசன் நினைவு படிப்பகம் அருகே அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது, கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு சாதமும்,சாதமும் கலந்த அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (56), என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி இருக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்தார்
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் மாணவர்கள் மத்தியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமை தாங்கனார். ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா முன்னிலை வகித்தார்.மனநல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி மாணவ- மாணவிகளுடன் […]
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் மாவட்டம் தோறும் சமூக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் திட்டமான 12 நாட்கள் உறைவிட பயிற்சியாகிய ஆப்த மித்ரா (பேரிடர் நண்பன்) பயிற்சி நடத்திட மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்த மித்ரா பயிற்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 86 சமூக ஆர்வலர்களுக்கு […]
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். […]
கோவில்பட்டியில் இன்று மாலை திடீர் என மேகம் கருத்து மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.கோவில்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மெயின்ரோட்டில் உள்ள ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடியது. இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தில் வழக்கம் போல் மழை தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மழை பெய்து கொண்டிருந்த போது புதுரோட்டில் சாலையோர மரம் ஒன்று சாய்ந்து அந்த வழியாக […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள், பீடி இலைகள் மற்றும் கஞ்சா போன்றவை கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் இங்கேயே பிடிபட்டு விடுகின்றனர். பலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுகிறார்கள்.கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்திச் சென்று அங்கு பிடிபட்டவர்கள் 14 பேர் இலங்கையில் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று இலங்கை அருகே தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு மீன்பிடி படகை […]
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 -வது வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள நாடகங்களில் நடித்து இருக்கிறார். ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், ‘மகள்’ உள்பட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ]லீனா ஆண்டனி சிறுவயதில் பத்தாவது வகுப்பு படித்தபோது தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இவரது கணவர் ஆண்டனியும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார்.தற்போது லீனா […]