மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.இந்த திட்டம் […]
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.மற்ற மாவட்டங்களில் இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3 அரசு தொடக்கப் […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் ம காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம்.கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி, முகமதுசாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம் மணியாச்சி, தோனுகால், படர்ந்தபுளி.எப்போதும்வென்றான்:- […]
தூத்துக்குடி பள்ளியில் காலை உணவு: மாணவர்களுக்கு பரிமாறி, தரையில் அமர்ந்து கனிமொழி, கீதாஜீவன்
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது […]
விளாத்திகுளம் தொகுதி மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவது குறித்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. விழிப்புணர்வு நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நடைபயிற்சி மேற்கொண்டு கிராமத்தில் உள்ள குறைகளை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நடுவது குறித்து கிராம மக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்மார்க்கண்டேயன், ரூ.3 ஆயிரம் நன்கொடையை கிராம மக்களிடம் வழங்கினார்கள் .மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டி பராமரிப்பதற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகரன் பொறுப்பேற்றுள்ளார்.மார்க்கண்டேயன் […]
யுடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாமாக முன்வந்து கோர்ட்டு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளதஇந்த தீர்ப்பை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதி ஓசோன் படலத்தை பாதுகாக்க உலக நாடு முழுவதும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் இன்று நடந்த உலக ஓசோன் தின விழாவிற்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். ஊர்வன ஆராய்ச்சியாளர் பீட்டர் கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்ந்து செல்கின்ற விலங்கினங்களான பாம்பு, முதலை, […]
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் 17-ந்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம். துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி உபமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.இந்த தகவலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பேரறிஞர் அண்ணா அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடித்தவர். அண்ணா வழியிலே நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி இன்றைய விடியா தி.மு.க. அரசில் ஒரு பண்பாடு கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகளைப் புழுதிவாரி தூற்றவேண்டும்,என்ற அந்த நாகரீகமற்ற அரசியலை இன்றைக்கு தி.மு.க. எடுத்துச் செல்கிறது என்று சொன்னால், அண்ணாவிற்குச் சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் […]
கோவில்பட்டி மண்டல அளவிலான அரசு, அரசு உதவி பெறும் மெட்ரிக், சுயநிதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் இன்று தொடங்கின.கோவில்பட்டி வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் 24 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.விளையாட்டு போட்டி தொடக்கவிழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராஜ், தூத்துக்குடி மாவட்ட DIPE பால்ச்சாமி, கவுன்சிலர்கள் ஜோஸ்பின் லூர்துமேரி, கனகராஜ், வ.உ.சி.பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன், உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் ஆகியோர் கலந்து […]