கிராம மக்களுடன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நடைபயிற்சி

விளாத்திகுளம் தொகுதி மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவது குறித்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. விழிப்புணர்வு நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடைபயிற்சி மேற்கொண்டு கிராமத்தில் உள்ள குறைகளை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நடுவது குறித்து கிராம மக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்மார்க்கண்டேயன், ரூ.3 ஆயிரம் நன்கொடையை கிராம மக்களிடம் வழங்கினார்கள்

.
மாசார்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டி பராமரிப்பதற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகரன் பொறுப்பேற்றுள்ளார்.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மேற்கொண்ட ஆய்வில் புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் மும்மூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதி சோலைசாமி கிளைச் செயலாளர்கள் சண்முகம் செல்லத்தாய் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர்
ராமச்சந்திரன் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர்
ஸ்ரீதர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்
