கோவில்பட்டி மண்டல அளவிலான பள்ளி மாணவர் தடகள போட்டிகள்

கோவில்பட்டி மண்டல அளவிலான அரசு, அரசு உதவி பெறும் மெட்ரிக், சுயநிதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் இன்று தொடங்கின.
கோவில்பட்டி வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் 24 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டி தொடக்கவிழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராஜ், தூத்துக்குடி மாவட்ட DIPE பால்ச்சாமி, கவுன்சிலர்கள் ஜோஸ்பின் லூர்துமேரி, கனகராஜ், வ.உ.சி.பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன், உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

14, 17,19 வயதுக்கு உட்பட்டோருக்கான 3 பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பரிசு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த போட்டிகள் அனைத்தும் உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. போட்டிகள் முடிந்ததும் மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.
நாளை வெள்ளிக்கிழமை மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் சுமார் 15௦ பேர் கலந்து கொள்கிறார்கள். போட்டிகள் நிறைவில் பரிசளிப்பு விழா நடக்கிறது.
