கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் 17-ந்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம். துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி உபமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.
