• June 7, 2025

Month: September 2022

செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த மின்கட்டண உயர்வு எவ்வளவு? முழு விவரம்

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண […]

செய்திகள்

தி.மு.க.எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரின் திருமணம் மதுரை கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில், முன்னிலை வகித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்வை நடத்தி வைத்து உள்ளார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் (தி.மு.க.) எம்.எல்.ஏ. வந்து பேசுகிறார்கள் என்று அவர் ‘புரூடா’ விட்டுக்கொண்டிருக்கிறார்.ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் […]

கோவில்பட்டி

நம்ம ஊரு சூப்பர்: கோவில்பட்டி அரசு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நம்ம ஊரு சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தூய்மை பாரத இயக்கம், முழு சுகாதாரம், நெகிழி தவிர்ப்பு, மரங்கள் நடுதல், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து பேசினார்.தொடர்ந்து மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர் களுக்கு […]

செய்திகள்

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவர்

மருத்துவ படிப்புக்கான நீட நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மதுரை மாணவர்த்ரிதேவ் விநாயகா சாதனை படைத்துள்ளார்தேர்வு மதிப்பெண் பட்டியலைதேசிய தேர்வு ஆணையம் நேற்றிரவு வெளியிட்டது. அதில் மதுரையை சேர்ந்த மாணவர் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய அளவில் தரவரிசையில் 30-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கோவில்பட்டி

அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு; வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு-26 இன் கீழ் 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் வரை 15 கி.மீ.நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்; அரசு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகலில் கோவில்பட்டியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் கோவில்பட்டி வந்து தங்கி இருந்தார்.இன்று காலை அவர் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் வரை நடந்து சென்றார்.டவுசர், டீ-சர்ட் அணிந்து இருந்த அவர் சாலையோரம் வேகமாக நடக்க தொடங்கினார். அவருடன் உதவியாளர் மற்றும் அதிகாரிகள் சிலர் நடந்து சென்றனர். அவருக்கு பின்னால் அவரது கார், பாதுகாவளர்கள் கார், மருத்துவ உயர் அதிகார் கார்கள் அணிவகுத்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்; குறைகள் கேட்டார்

கோவில்பட்டியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.ஸ்டாலின் திட்டங்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தீப்பெட்டி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.ஏற்கனவே தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தங்கள் தொழிலுக்கு உள்ள இடையூறு, பிரச்சினைகள் பற்றி முதாழ் அமைச்சரிடம் மனு அளித்து இருந்தனர்.அதன் அடிப்படையில் இந்த ஆய்வை முதல் அமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டார். ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். மேலும் தீப்பெட்டி தயாரிப்பு விதத்தை பார்வையிட்டார், ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தங்கம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்தும் நேரில் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார்முதற்கட்டமாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்; அமைச்சர்கள்ஆய்வு

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.மேலும் திட்டங்குளம் பகுதியில் உள்ள திலகரத்தினம் தீப்பெட்டி ஆலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அப்போது அவர்கள் கோரிக்கைகள் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்.ஸ்டாலின் வருகை தொடர்பாகவும் விழா ஏற்பாடு பணிகள் குறித்தும் வருவாய் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி விமானத்தில் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரையை தொடக்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் டி.ஆர்.பாலு, எம்.பி.யும் வந்தார்.அந்த விமானத்தில் பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகர் பயணம் செய்தார். அவர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.