கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்; குறைகள் கேட்டார்

கோவில்பட்டியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.ஸ்டாலின் திட்டங்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தீப்பெட்டி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தங்கள் தொழிலுக்கு உள்ள இடையூறு, பிரச்சினைகள் பற்றி முதாழ் அமைச்சரிடம் மனு அளித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் இந்த ஆய்வை முதல் அமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டார். ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். மேலும் தீப்பெட்டி தயாரிப்பு விதத்தை பார்வையிட்டார்,

ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு,கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,ராஜ கண்ணப்பன்,மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் வந்து இருந்தனர்.
