கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்தும் நேரில் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார்
முதற்கட்டமாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று பகலில் தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த கட்டிடம் 1௦.5௦ கோடி முதலீட்டில் உருவாகி உள்ளது, இங்கு அளிக்கப்பட இருக்கும் சிகிச்சை முறைகள் பற்றியும், நவீன கருவிகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமனியன்,தங்கம் தென்னரசு,கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,ராஜ கண்ணப்பன்,மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
