• June 7, 2025

கோவில்பட்டியில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்; அமைச்சர்கள்ஆய்வு

 கோவில்பட்டியில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்; அமைச்சர்கள்ஆய்வு

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
மேலும் திட்டங்குளம் பகுதியில் உள்ள திலகரத்தினம் தீப்பெட்டி ஆலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அப்போது அவர்கள் கோரிக்கைகள் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்.
ஸ்டாலின் வருகை தொடர்பாகவும் விழா ஏற்பாடு பணிகள் குறித்தும் வருவாய் துறை அமைச்சர் கே .கே .எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் மற்றும் தென்னரசு , மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசீலா, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கெங்காபரமேஸ்வரி, பரமசிவம், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, மருத்துவர் மோசஸ்பால், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், துணை தலைவர்கள் ராஜு, கோபால்சாமி, செயலாளர் சேதுரத்தினம், பொருளாளர் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், துணை தலைவர்கள் திலகரத்தினம், சின்னகொம்பையா, செயலாளார் கதிரவன், பொருளாளர் செல்வ மோகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன் , நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ் ஆகியோர் உடன் சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *