• June 7, 2025

Month: September 2022

செய்திகள்

சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை; கல்குவாரி உரிமையாளர் – 2 பேர்

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 39) என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு செல்வக்குமார் நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]

செய்திகள்

நள்ளிரவில் மது, நடன விருந்து: அரை குறை ஆடையுடன் ஆட்டம் போட்ட 3௦

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டு இருந்தனர். குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்கள் அங்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் யோகாசன போட்டி; பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.தொடக்க விழாவுக்கு தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் தலைவர் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரியநாராயணன், மணிகண்டன், சந்தனராஜ், சோலை நாராயணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்.தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொது செயலாளர் மாரியப்பன் போட்டியை தொடக்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் நடந்த யோகாசன போட்டிகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

நாடு முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்ட்டது. மாணவர்கள் மற்றும் வாசகர்கள் 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தலைசிறந்த தலைவர்களின் சுவையான நிகழ்வுகள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க […]

கோவில்பட்டி

டாஸ்மாக் நிர்வாகம், நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்; பணியாளர் சங்க கூட்டத்தில்

டாஸ்மாக் பணியாளர்கள் செப்டம்பர் 29- அன்று நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவ்கர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் கு,சரவணன் சிறப்புரை ஆற்றினார். மாநில பிரசார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி (திண்டுக்கல்),சுரேஷ் குமார் (கன்னியாகுமரி), கண்ணன்(தென்காசி) மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன் […]

கோவில்பட்டி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

கோவில்பட்டியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.கோவில்பட்டி உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டியில் மாணவ, மானவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்/ நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அண்ட் […]

செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கினார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவு செய்ய உள்ளார்.இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே சுங்கசாவடியில் காங்கிரசார் மறியல்: 36 பேர்மீதுவழக்கு

கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரையாக காஷ்மீர் வரையிலும் செல்கிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தியுடன் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். இதில் பங்கேற்ற சேலம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இரவில் ஏராளமான வேன்கள், கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.இவர்கள் கோவில்பட்டிக்கு முன்பாக கயத்தாறு சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, தங்களது வாகனங்களை இலவசமாக அனுமதிக்க கோரியும், ஏற்கனவே சேலத்தில் […]

செய்திகள்

காதலி சவால்: மணமேடையில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து திருமணத்தை நிறுத்திய வாலிபர்

சென்னை சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெறுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார், தனது காதலியிடம், “என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது […]

செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் தி.மு.க.வுடன் தொடர்பில் இல்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அ.தி.மு.க. தலைமைக்கழகதத்துக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.யை சந்தித்து கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டுவர ஓ.பி.எஸ். முயற்சி மேற்கொள்கிறாரா? பதில்:- உயர்நீதிமன்றத்தில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பார்த்தால் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே அப்படி முயற்சி […]