பிளாஸ்டிக்கை ஒழிப்போம்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

கோவில்பட்டியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
கோவில்பட்டி உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டியில் மாணவ, மானவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாகசங்கள் செய்து அசத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்/ நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்சுரல் டிரஸ்ட் துணை தலைவர் லாரன்ஸ் வரவேற்று பேசினார்.


சிறப்பு விருந்தினாராக வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு,ஓட்டுமொத்த குழு சாம்பியன் பரிசு வழங்கி பேசினார். உண்ணாமலை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் சண்முகம், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேசன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.
