டாஸ்மாக் நிர்வாகம், நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்; பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

டாஸ்மாக் பணியாளர்கள் செப்டம்பர் 29- அன்று நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவ்கர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் கு,சரவணன் சிறப்புரை ஆற்றினார். மாநில பிரசார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி (திண்டுக்கல்),சுரேஷ் குமார் (கன்னியாகுமரி), கண்ணன்(தென்காசி) மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*2021-22 ம் ஆண்டுக்கான போனஸ் 3௦ சதவீதம் வழங்கவேண்டும்.
- பார் உரிமையாளர்கள் மற்றும் முறையற்ற பார் நடத்துபவர்களால் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்தவேண்டும்.
*தொழிற்சங்க சட்டங்களின்படி 480 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யவேண்டும். மேலும் 1௦ ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.
*டாஸ்மாக் நிர்வாகம், நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
*மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல்களில் வெளிப்படையான முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
*ABC பணியிட சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும்.
*அனைத்து மாவட்டங்களிலும் பணிநிரவலை அமல்படுத்த வேண்டும்
*விற்பனை தொகையை நேரடியாக வசூல் செய்ய சென்னையில் உள்ள நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
