கோவில்பட்டியில் யோகாசன போட்டி; பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் தலைவர் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரியநாராயணன், மணிகண்டன், சந்தனராஜ், சோலை நாராயணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொது செயலாளர் மாரியப்பன் போட்டியை தொடக்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் நடந்த யோகாசன போட்டிகளை கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி பார்வையிட்டார் பள்ளி மாணவிகள் பங்கேற்று பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினார்கள். பார்வையாளர்கள் இவற்றை கண்டு ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள்.’

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி தலைவர் கருணாநிதி பரிசுகள் வழங்கினார். ஒட்டுமொத்த குழு நபர் சாம்பியன் பட்டத்தை மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் நர்சரி பள்ளி தட்டிச்சென்றது.
விஜயகரிசல்குளம் மகாத்மா காந்தி நரசரி பள்ளி, கோவில்பட்டி ஹரிதா பப்ளி பள்ளி ஆகியவவை சாம்பியன் முதல் இடத்தையும், அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் வேங்கிடசுவாமி நாயுடு நடுநிலைப்பள்ளி சாம்பியன் 2 -ம இடத்தையும் பெற்றன,
ஆனமலையன்பட்டி பென்னடிக் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, புதியம்புத்தூர் ஹெச்.என்.யு.பி. நர்சரி பள்ளி, பெரம்பலூர் பாரத் பர்ஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆகியவை சாம்பியன் 3-ம இடத்தை பிட்த்த்தன.
கோவில்பட்டி லட்சுமிமில்ஸ் மெட்ரிக் பள்ளி, மந்திதொப்பு செண்பகராஜ் நினைவு தொடக்கப்பள்ளி, தூத்தக்குடி கோல்டன் நர்சரி பள்ளி, போடி, தேனி சிசம் மெட்ரிக் பள்ளி, சாத்தூர் first blossom பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் பப்ளிக் பள்ளி, கழுகுமலை செயின்ட் மடோனாஸ் மெட்ரிக் பள்ளி, ராசிங்காபுரம் சிசம் ரூரல் அகாடமி, பெரம்பலூர் தமிழ் யோகா சென்டர், விளாத்திகுளம் எஸ்.என்.டி.நரசரி பள்ளி, நெய்வேலி சுவாமி விவேகானந்தா சென்டர், பணகுடி சேக்ரெட் பப்ளிக் பள்ளி,கோவில்பட்டி சபரி ச்ஜெயன் யோகா கிளப்,பரப்பாடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை சிறப்பு பரிசுகள் பெற்றன,
