• June 7, 2025

Month: August 2022

ஆன்மிகம்

கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை, நலம் அருளும் திருக்கோவில்கள்

தமிழ்நாட்டில் கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோவில்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம் கரு உருவாக —கரூர் *பசுபதீஸ்வரர் கோவில் சுகப் பிரசவத்திற்கு –– திருச்சிராப்பள்ளி *தாயுமானவர் கோவில் நோயற்ற வாழ்விற்கு — வைதீஸ்வரன் கோவில், வைதிய லிங்க கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தீரா நோய் தீர —- திருவதிகை திரிபுரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில். குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோவில் நவ கிரக தோஷங்கள் நீங்க — திருக்குவளை […]

செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு; கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆகஸ்டு 20 ந்தேதி சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் 251 -வது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்டம்பர் 1 ந்தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினா் சார்பில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளூா் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று ஆகஸ்டு 19 […]

கோவில்பட்டி

உலக புகைப்பட தினம்: கோவில்பட்டியில் புகைப்பட கலைஞர்கள் பேரணி

கோவில்பட்டியில் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்படதினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகை முன்பிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் , பச்சை கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர். பேரணியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர், போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க கவுரவ தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து

மதுரையில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார்.இன்று அதிகாலை வேளையில் எட்டயபுரம் தாண்டி திட்டங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக்கின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அருகில் உள்ள கால்வாய் ஓடையில் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது=இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரியில் […]

கோவில்பட்டி

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா.கோரிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர செயலாளர் டி.மூர்த்தி ஆகியோர் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் […]

செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து கட்சி முடிவெடுக்கும்- டி.ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை […]

கோவில்பட்டி

ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம்: கலெக்டரின் உத்தரவு நிறைவேறுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கலெக்டர் உத்தரவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூல் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது கூடுதல் தொகை வரும்வகையில் மீட்டருக்கு சூடு வைத்து டிரைவர்கள் ஓட்ட தொட்ங்கினார்கள்.நாளடைவில் மீட்டர் கட்டணம் முறையை மறந்து குத்து மதிப்பாக கட்டணம் வசூல் செய்ய தொடங்கி விட்டார்கள். இது ஆட்டோ டிரைவர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. அவர்கள் வைத்தது தான் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடி ஏற்றினார். தொடர்ந்து […]

செய்திகள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி […]