கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு சார்பில், 1௦ மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதுக்கிராமம் இல்லத்தார் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மருத்துவர் வேலம்மாள், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி […]
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான சிந்தனை கூட்டம் கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது.கூட்டத்தில் குடும்ப நிகழ்வுகளை தமிழ் மரபுபடி குறள்நெறிப்படி நடத்திடவும், ஒவ்வொரு திருக்குறள் மன்றங்களிலும் திருக்குறள் ஆசானை உருவாக்கிடவும், திருக்குறளின் புகழை கிராமங்கள் தோறும் பரப்பிடவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுசிந்தனை கூட்டம் நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் சேகர் காணொளி மூலம் தலைமை தாங்கி பேசினார்.உலக திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழரசன் அனைவரையும் […]
பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் வால்வில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு டி.ராஜேந்தருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் தேறியது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வு எடுத்தார். பூரண குணமடைந்த நிலையில் நேற்று […]
2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் […]
குழந்தை ரமேசுக்கு அன்று மூன்றாவது பிறந்த நாள்… கணேசனும் கனகாவும் தங்கள் மகனின் பிறந்தநாளை காலையில் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.உறவினர்கள் புடை சூழ ஹேப்பி பர்த்டே டூயூ என்று பாட்டுபாடி கேக் வெட்டினார்கள்.குழந்தை ரமேசுக்கு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டிருந்தார்கள் அவன்.தலையில்தொப்பி மாட்டியிருந்தார்கள். அவன் கேக் வெட்டுவது போல் படம் எடுக்க அவன் கையில் சின்ன கத்தியை கொடுத்து போஸ் கொடுக்க சொன்னார்கள்.அவன் கேக்கை எடுப்பதிலே குறியாக இருந்தான்.அங்கும் இங்கும் தலையை ஆட்டினான். கணேசன் தன்மகனின் கையைபிடித்துகத்தியால் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி […]
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் கப்பல் மூலம் அரிசி, பால் பவுடர் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலின் மூலமாக ரூ.54 கோடி மதிப்பிலான 16356 டன் அரிசி, […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தக்கோரி அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,தாலுகா அலுவலகம் எதிரே இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் (சி,பி.ஐ.- எம்.எல்.) தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி மாவட்ட இலம்புலிகள் அணி செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார்.தமிழ்புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் வில்லிசெரி முருகேசன், ஒன்றிய நிதி […]
ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும். பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும் பரிசோதனை செய்யும் நேரத்தை பொருத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும்.சாப்பிடுவதற்கு முன் 12௦ மில்லி கிராமுக்கு கீழும், சாப்பிட்ட பின் 16௦ மில்லி கிராமுக்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமஒரு நாளில் மூன்று முறையும் மாதத்தில் 9௦ முறையும் சர்க்கரை அளவு ஏறி இறங்குகிறது. இந்த நிலையில் […]