தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (வயது 32) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.இதை தொடர்ந்து முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா , மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு […]
ஆந்திராவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திரா: ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.கடந்த 3-ந் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் […]
சசிகலாவுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்படுகிறதா? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
கழகத்தின் கொடியையும்,பொதுச் செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- அ.தி.மு.க. பொதுசெயலாளர் என்று சொல்லிக்கொள்ளும் அவரின் ( சசிகலா) மனு தேர்தல் ஆணையத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.அதற்கு பிறகு சீராய்வு மனு செய்தார்.அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இப்படி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு.இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மனு நிராகரிக்கப்பட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டு.,உச்சநீதிமன்றத்தால் […]
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரை வீட்டுக்கு வந்து சென்ற போது, ரோஜாவை பார்த்துள்ளார். இதன் பின்னர் சாமிதுரை, ரோஜாவை ஒரு […]
தேசிய சிலம்ப போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு வரவேற்பு
நேபாளத்தில் போக்கரா என்ற இடத்தில் தேசிய அளவில் மாணவா்களுக்கான சிலம்பம், கபடி, பேட்மிண்டன், யோகா, கிரிக்கெட், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில், தமிழகத்திலிருந்து 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். தூத்துக்குடி சவோரியார்புரத்திலிருந்து தேவராஜ் வாஸ்தாவி சிலம்பாட்டம் கழகம் சார்பில் 4 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில், 5 ம் வகுப்பு மாணவர் பியா்சன் முதல் பரிசான தங்கப்பதக்கம், 8 ஆம் வகுப்பு மாணவர் ஜெய்கணேஷ், 6ம் வகுப்பு மாணவர் அபிவந்த், 9ம் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூஜை விழா நடைபெறுவது வழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினம் கடற்கரையில் பேழை (பெட்டி) ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை கொண்டுவந்து திறந்து பார்த்த போது அந்தப் பெட்டியில் அம்மன் சிலை மற்றும் ஓலைச்சுவடி இருந்தது. அந்த ஓலைச் சுவடியில் இந்த அம்மனின் பெயர் ஆயிரம் காளியம்மன் என்றும் இந்த அம்மனுக்கு படையலிடும் போது எந்த […]
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்டு […]
தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. , யு.கே.ஜி. வகுப்புகள் , கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எல்.கே.ஜி., யுகே.ஜி. வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்படுவதாகவும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் நேற்று முன்தினம் அரசு அறிவிப்பு வெளியானது.தமிழக பள்ளி கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்பினால் சாதாரண நடுத்தர மக்கள் அவதிப்படுவார்கள் என்று கூறப்பட்டதுஇந்த நிலையில் […]
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக, கல்லூரி முதல்வர் அப்பாஸ் மாதிரி உத்தரவின் பேரிலும், அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வழிகாட்டலின் படியும் “பெண் குழந்தையைக்காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார். பெண்குழந்தைகள் பாதுகாப்பு முறை குறித்தும், பெண்கல்வி கற்பதின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, […]
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன் விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48). சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலைமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அதன்பிறகு அவர் சென்னைக்கு செல்லாமல் பெற்றோருடன் தங்கி இருந்தார். ‘நேற்று முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக தாயார் ரோஜாவுக்கும், மகன் சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுஇதில் […]