• June 7, 2025

`போக்சோ’ வில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

 `போக்சோ’ வில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (வயது 32) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா , மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், பரிந்துரை செய்ததன்பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ், ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த முருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *