திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் வசந்த விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான ஜூன் 12 (ஞாயிற்றுக் கிழமை ) வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. அதன், பின்னா் […]
துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரபல நடன இயக்குனர் பிருந்தா கோபால்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பிருந்தா இயக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனைபற்றி புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் நம்பர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி, விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்தது கனடுபிடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து 4 கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், உத்தரவிட்டார்.அதே போன்று முதல் முறையாக புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் […]
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.கோவில்பட்டி கால்பந்து கழகம், சண்முகையா பாண்டியனார் பேரவை இணைந்து நடத்திய இந்த போட்டியில் வட்டார அளவில் 8 அணிகள் பங்கு பெற்றனஇறுதி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், காமநாயக்கன் பட்டி அணியும் மோதின இதில் வ.உ.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. காமநாயக்கன்பட்டி அணி 2-வது இடம் பெற்றது.3-வது, […]
கோவில்பட்டி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.ராமசாமி தாஸ் பூங்கா சுத்தம் செய்தல் , அண்ணா பேருந்து நிலையம் சமுதாய கழிப்பறை சுத்தம் செய்தல், அண்ணா பேருந்து நிலைய வளாக சுவரொட்டிகளை அகற்றுதல், சுடுகாடு சுத்தம் செய்தல், கட்டிட கழிவுகளை அகற்றுதல், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதியான ஊரணி தெருவில் செயல்பட்டு வந்த நகர் நலமைய கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் அதை இடித்து விட்டு ரூ 75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ். நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி, […]
தூத்த்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட அரசு வாய்ப்பளித்துள்ளது.இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் , கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500/- ஆக […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அமைச்சரின் திடீர் ஆய்வை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் திகைத்து போனார்கள். நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதன் பின்னர் மருத்துவர் இருக்கும் இடத்தை சென்று பார்த்தார்.அப்போது மருத்துவர் பூபேஷ்குமார் அங்கு […]
குடிபோதை:தண்டவாளத்தின் குறுக்கே படுத்து தூங்கிய 2 பேர், ரெயிலில் அடிபட்டு பலியான கொடூரம்
நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் குழந்தைதுரை. இவருடைய மகன் ஜெபசிங்(வயது 27). இவர் நேற்று தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ச.மாரிமுத்து(23), பசும்பொன்நகரை சேர்ந்த காளிப்பாண்டியன் மகன் கா.மாரிமுத்து(23) ஆகியோரை சந்தித்தார். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஜெயிலில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளனர்.நேற்று இரவு திருமண வரவேற்பு […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன் மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் ஸ்கேன் மையம் தவிர மருத்துவமனையும் இயங்கி வருகிறது.ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த 7-ந்தேதி காலை இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 25 […]