பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பணியிடை நீக்கம்; அமைச்சர் அதிரடி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சரின் திடீர் ஆய்வை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் திகைத்து போனார்கள். நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதன் பின்னர் மருத்துவர் இருக்கும் இடத்தை சென்று பார்த்தார்.
அப்போது மருத்துவர் பூபேஷ்குமார் அங்கு பணியில் இல்லை. உடனே மருத்துவர் பூபேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.
அதையடுத்து பணி நேரத்தில் பணியில் இல்லாததால் மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
