• June 8, 2025

Month: June 2022

கோவில்பட்டி

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண், பெண் பக்தர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சேவைகளை மக்கள் மத்தியில் விளக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்,. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொது செயலாளர் சரவணக்குமார்,மற்றும் கிஷோர்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி முன்னாள் […]

கோவில்பட்டி

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக சில பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் […]

செய்திகள்

சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது: தமிழக ஆளுநர் பேச்சுக்கு வைகோ கண்டனம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார். அவரது உரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜி (எ) தோட்டா ராஜ் (27) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் […]

செய்திகள்

போராட்டம் நடத்த அ.தி.மு.க. பின்வாங்காது – டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தா அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் ,அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.:-கேள்வி:- .அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதே பதில்:- நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கழகம் என்ன செய்கிறது என்ற அசைவுகளைத்தான் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,அம்மா காலத்திலும் சரி.அந்த எதிர்பார்ப்புகளை கழகம் நிறைவேற்றியது. ஒட்டுமொத்தமாக இந்த விடியாத […]

தூத்துக்குடி

கந்து வட்டி கடன் புகார்: கைதானவர் வீட்டில் இருந்து 22 ஆவணங்கள் பறிமுதல்-

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த நம்பி (வயது 49). இவர் ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு ரூ. 2,50,000- ஐ வட்டிக்கு கடனாக கொடுத்து இருக்கிறார். பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரித்து கடந்த 9.6.2022 அன்று நம்பியை கைது செய்தனர். பின்னர் […]

தூத்துக்குடி

13-ந் தேதி பள்ளிகள் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்; வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் பொது தேர்வு முடிந்து மே மாதம் கோடை விடுமுறை விடுவதும், ஜூன் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதும் வழக்கம்.கொரோனா பிரச்சினை காரணமாக இவ்வாண்டு மே மாதம் வரையில் பள்ளிகள் திறந்திருந்தது. இறுதி தேர்வும் நடந்தது. அதனால் ஜூன் மாதம் முதலிலேயே திறக்க வேண்டிய பள்ளிகள் நாளை மறுநாள் 13ம் தேதி (திங்கட்கிழமை) திறக்க இருக்கிறது. இந்தநிலையில் பள்ளி கட்டிடங்கள், குடிதண்ணீர், கழிவறை வசதிகள், மற்றும் வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு […]

செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 200ஐ தாண்டியுள்ளது .இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;-தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்.கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் […]

தூத்துக்குடி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம்- அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று (11.6.2022) அதற்கான விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-’தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால சந்ததியினரை உயர்ந்தநிலைக்கு […]