தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழிகாட்டல் – நெறிமுறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அடுக்கடுக்கான கட்டளைகள் பிரபித்து இருக்கிறார், அதன் விவரம் வருமாறு:- குற்றம் சாட்டப்பட்ட நபர்களை – சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்தரவதை செய்யவோ கூடாது. இதுகுறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மேல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனிப்படை (Special Team) போலீசார் கண்காணிக்கப்பட வேண்டும். *குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையம் தவிர லாட்ஜ்கள், […]
கோவில்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கடந்த கோடை காலங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.பகல் நேரங்களில் வெளியே வருபவர்கள் அதிகம் பேர் இளநீர்,மோர், பழரசம், சர்பத், குளிர்பானங்கள் அருந்தி வெப்பத்தை தணித்தனர், இதனால் இது போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதியது.இறிப்பினும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தில் டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி பூஜையும், காப்பு கட்டுதல், கும்ப தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு கோவிலில் வலம் வந்து யாகசாலையில் வைக்கப்பட்டன,முன்னதாக ஒரு தீர்த்த குடத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, தலையில் சுமந்து வந்தார். அவருடைய மனைவி இந்திரா காந்தி உடன் வந்தார். இதனைத் […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு […]
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு […]
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள், ஐஸ்பாக்ஸ், மீன்பிடி வலை, மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் […]
நாகர்கோவிலில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது, . அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாககயத்தார் அரசங்குளம் அருகே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் பலத்த காயம் அடைந்து ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். விபத்தில் தப்பிய ஒரு சிலர் வேறு பஸ்கள் […]
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்கராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.இதனால் அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து […]
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம்; நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்- டி.ஜெயக்குமார்
சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றத இந்த கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘கருத்து கேட்பு என்ற அடிப்படையில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஆரோக்கியமான அடிப்படையில் நான்கரை மணிநேரம் அமைதியாக நடைபெற்றது என்றால் ஒரு ராணுவ கட்டுப்பாடு உள்ள இயக்கம் கழகம் என்பதை இதன் மூலம் நிச்சயமாக நீங்கள் அறியலாம்.பொதுக்குழு கூடவுள்ள நிலையில் அந்த பொதுக்குழுவை ஒட்டி இன்றைக்கு இந்த […]