கோவில்பட்டி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவிலில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது, . அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாக
கயத்தார் அரசங்குளம் அருகே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் பலத்த காயம் அடைந்து ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். விபத்தில் தப்பிய ஒரு சிலர் வேறு பஸ்கள் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்,
விபத்தில் பலியானவர்களில் 2 பேர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்றொருவர் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கபட்டது, போலீசார் கிரேன் மூலம், விபத்தில் சிக்கிய பஸ்சை தூக்கி நிறுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் விபத்து குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
