இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசும் உதவ முன்வந்தது. இலங்கைக்கு அரிசி, பால்பவுடர் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.மத்திய அரசும் அனுமதி அளித்து விட்டது.அதனைத் தொடர்ந்து ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் 2.6.2022 முதல் 12.6.2022 வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமானது தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 வரை மட்டும் நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி உபகரணங்கள் வழங்கப்பட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சி […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.கோவில்பட்டியை சேர்ந்த செய்தியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகி மற்றும் உதவியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் சிலர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேரை வெளியேற சொல்லி இருக்கிறார்கள். ஏன் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பதில் சொல்லாமல் , இந்தி பேச […]
திண்டுக்கல் குட்டியபட்டியில் தமிழ் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டானகிடாமுட்டு’ இன்று நடத்தப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் ,மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான முரட்டு ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.ஒவ்வொரு கிடாக்களும் பார்வையாளர்களை மிரள வைத்தன. கிடாக்களை அவற்றின் உரிமையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.திண்டுக்கல் குட்டியபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இந்த கிடாமுட்டு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் தொழில் அதிபர் கே.எஸ்.எம்.சலீம், நாட்டாமை காஜாமைதீன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி, காங்கிரஸ் மாவட்ட […]
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. உடனே அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால், சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த வீட்டில் இருந்த ஜெய்னுபீ (60), அவரது மகன் தாது (36), மருமகள் சர்புன்னா (30), பேரன் ஃடோஸ் (6) 4 பேரும் சம்பவ இடத்திலேயே […]
பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. அதன்படி சென்னை திருவேற்காட்டில் ஒரு திருமண மணடபத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவுக்கு மேல் 1.30 மணி அளவில் சாமக்கொடை நடைபெற்றது.அப்போது தெய்வச் செயல்புரத்தை சேர்ந்த சாமியாடியான முருகன் (வயது 65) என்பவர் வேட்டைக்கு புறப்பட்டு சென்றார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் […]
சென்னை ,பல்லாவரம் அருகே பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். ஐ.டி.ஊழியர். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு நித்ய ஸ்ரீ (வயது 13) என்ற மகளும், ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அருக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த பல்லாவர்ம் போலீசார் சம்பவம் இடம் சென்று 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மூக்கையா மகன் மாரிசெல்வம் (21) மற்றும் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சங்கர் குரு (35) என்பதும், […]