தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து, இவர் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீனா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.அவர்களுக்கு நிஷாந்த் என்ற 4 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிஷாந்த் இசக்கிப்பாண்டியனிடம் வசித்து வருகிறார்.இதற்கிடையில் மீனா, நாங்குநேரி அருகில் உள்ள பட்டப்பிள்ளை புதூரை சேர்ந்த முத்து என்பவரை […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் தமிழ்நாடு மாநில பனை மற்றும் நார்ச்சத்து மார்க்கெட்டிங் கூட்டமைப்புக்கான கட்டிடம் பயன்பாடு இல்லாமல் பாழடைந்து காணப்ப்டுகிறது.இந்த கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் காவல் நிலையமாக படம் பிடிக்கப்பட்டது,இந்த காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா, நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பில் பல நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் மறுபடியும் பாழடைந்த நிலையில் இந்த கட்டிடம் காட்சி அளிக்கிறது.இந்த கட்டிடத்துக்குள் […]
தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தெப்பக்குளம் கனகசபை தெருவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒரு சாக்குப்பையில் வைத்து விற்பனை செய்த விநாயகம் (வயது 41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 63,500 மதிப்புள்ள 17 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்இதுகுறித்து […]
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பாக ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-‘சங்க காலத்திலிருந்து இன்றுவரை சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். எந்த பெண்களும் முதலில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் முடியும் என்று நினைக்க வேண்டும். தைரியமாக முன்வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவர்கள் […]
விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விளாத்திகுளம்- எட்டயபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை அருகே சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர்கள் விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த எட்டுராஜ் மகன் முத்துராஜ்(22) மற்றும் அயன் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (53) என்பதும், அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு […]
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான இன்று பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 842 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 462 பேரும், திருச்செந்தூர் கல்வி […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-உணவகங்களில் ‘சவர்மா’ தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடத்தில் மட்டும் தான் சிக்கன் போன்ற மூல உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சிக்கனை மசாலாவுடன் கலக்கும் போது, கையுறை அணிந்திருக்க வேண்டும்..சவர்மா. தயார் செய்யும் பணியாளரும் ஏனைய பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவரிடம் இருந்து […]
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் நேற்று அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான காத்தம்மாள் (எ) கார்த்திகாவும், அவரது தாயார் காளியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டு மனமுடைந்த அமைச்சரர் கீதாஜீவன் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். அந்த சம்பவத்தில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவருக்கு நிதியுதவி அளித்து, […]
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய மாணவர் படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் ஒரு மாதம் நடைபெற்றது. இந்த பயிற்சி அகாடமியில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 112 பேர் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை பெண் அதிகாரி லோலிடா ஜுடு கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து […]
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) யில் 40 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ருஷ்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கல்லூரி செயலர் புளோரா மேரி அனைவரையும் வரவேற்றுப பேசினார். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை வாசித்தார். துறைத்தலைவர்கள் முன்மொழிய மாணவிகள் தங்களது பட்டச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.விழாவில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் முனைவர் புனிதா தாரணி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022