தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு மதுரை தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டு பெருமளவில் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குளில் சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.*இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை தென்மாவட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டு மொத்த விற்பனை மற்றும் கடத்தலுக்கு மூல காரணமாக செயல்படுபவர்கள் யாரென […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகிற 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தசரா திருவிழாவில் தினந்தோறும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான விவசாயிகள், அடித்தட்டு மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வார்டு கழிப்பறைகளில் கதவு இல்லாமல் உள்ளது.இதனால் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு கதவுகள் அமைக்க வேண்டும். நோயாளிகளுக்கு மாத்திரைகள் […]
கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் பணிக்கர்குளம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தெற்கு இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பூல்பாண்டி மகன் சதீஷ் (19) என்பதும் அவர் வடக்கு இலந்தைகுளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 2,050/- திருடியதும் தெரியவந்தது.உடனே மேற்படி உதவி ஆய்வாளர். பால் மற்றும் போலீசார் எதிரி சதீஷை கைது […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொது மக்களிடமிருந்து 366 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் சாத்தான்குளம் […]
தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவிழாவில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ (தெற்கு), முரளிதரன் (மாநகரம்), காமராஜ் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேந்திரன் வரவேற்று பேசினார். ஐ.என்.டி.யு.சி. செயற்குழு உறுப்பினர் ராஜ் நோக்க உரையாற்றினார்.அமைச்சர் கீதாஜீவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மையினர் […]
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ராஜாமார்ஷல் என்பவர் கடந்த 27.6.2022 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.இதைதொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு அவருடன் 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்து அவருடன் பணிபுரிந்து வருகின்ற தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினரும் சேர்ந்து ரூபாய் 17,35,000/- நிதி திரட்டி ராஜாமார்ஷல் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு ரூபாய் 16 லட்த்திற்க்கு எல்.ஐ.சி வைப்பு நிதியாகவும், அவரது தந்தை லெட்சுமணன் மற்றும் தாயார் சமுத்திரகனி ஆகியோருக்கு ரூ. […]
தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர் உள்ளிட்ட பலருக்கு, அவர்களை நினைவு கூறும் வகையிலும், வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையிலும் பல இடங்களில் மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட நேதாஜி சுபாஷ் […]
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் முருகன் என்ற கட்டை முருகன் (வயது 27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 18 வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவரும், அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் […]
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
