கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி அ.சின்ன ராசு தலைமை தாங்கினார்.கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால், சமூக ஆர்வலர் வெங்கடம்மாள் ஆகியோர் […]
விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது 1999-2000 ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.பின்னர் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இத்திட்டத்தில் தோய்வு ஏற்பட்டபோதிலும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது மேலும் பல இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றனஇடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளே தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்யலாம். […]
கோவில்பட்டி நடராஜபுரத்தில் அரசு மின் மயானம் உள்ளது. அதற்கு அருகில் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நந்தவனம் அமைக்கப்பட்டு உள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி யோகீஸ்வரர் சமுதாய தலைவர் கே.டி.ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வெயிலுமுத்து வரவேற்றார். பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அகில இந்திய சிவகுலத்தார் சமுதாய தலைவர் டி.வி. சேகர், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில தலைவர் எஸ்.ராஜகோபால் […]
கோவில்பட்டி லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்ற போது பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் மற்றும் விலை […]
கோவில்பட்டி பஸ் நிலையத்துக்குள் பெர்மிட் இல்லாமல் மினி பஸ்கள் வந்து செல்வதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பபட்டு உள்ளது.தமிழ் பேரரசு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மா.வேல்முருகன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:கோவில்பட்டியில் அதிகளவு மினி பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. எந்த மினி பஸ்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை, மாற்றாக சட்டவிரோதமாக மாற்று வழித்தடங்களில் சென்று வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது.இதுபோல் மினி பஸ் டிரைவர்களுக்கும் […]
கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம், நடுத்தெருவில் குடியிருப்பவர் கந்தவேல் (வயது 52). விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் டிராக்டர் வைத்து உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்த கெங்காராஜ் (44) என்பவர் என்னுடைய நிலத்தில் எப்படி உழுதாய்? என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.மாலையில் கந்தவேல் வீட்டுக்கு திரும்பி வரும்போது, கெங்காராஜ் உள்பட சிலர் சேர்ந்து அவரை கம்பால் தாக்கியதாகவும், தடுக்க வந்த மனைவி ரெங்கநாயகியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் […]
கோவில்பட்டி அருகே தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிவதாக பசுவந்தனை போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டு முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அந்தப் பெண் ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி கலையரசி (வயது 40) என்பது தெரியவந்தது. இவருக்கு நிதிஷ்குமார் (11) என்ற மகன் உள்ளான். மனநிலை பாதிக்கப்பட்ட […]
கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.தொடக்க விழாவுக்கு தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் தலைவர் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரியநாராயணன், மணிகண்டன், சந்தனராஜ், சோலை நாராயணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ் கல்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்.தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொது செயலாளர் மாரியப்பன் போட்டியை தொடக்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளில் நடந்த யோகாசன போட்டிகளை […]
நாடு முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்ட்டது. மாணவர்கள் மற்றும் வாசகர்கள் 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தலைசிறந்த தலைவர்களின் சுவையான நிகழ்வுகள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க […]
டாஸ்மாக் பணியாளர்கள் செப்டம்பர் 29- அன்று நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தொடர்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவ்கர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் கு,சரவணன் சிறப்புரை ஆற்றினார். மாநில பிரசார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி (திண்டுக்கல்),சுரேஷ் குமார் (கன்னியாகுமரி), கண்ணன்(தென்காசி) மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
