இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. கொடுக்கும் கடன் தொகைக்கு கொடுமையாக வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பதுடன், பல கோடி ரூபாய் சீனா சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில் சீன கடன் செயலி […]
பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் […]
திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது:-வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள். பிளவு பட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அண்ணன்- தம்பி மாதிரி. பா.ஜ.க.வினர் சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர். அதனால் தான் அ.தி.மு.க.வை சேரவிடாமல் […]
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இடத்தில் சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும் (வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவுக்கும் (36) இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து இவர்களுக்கான திருமணம், கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று நடந்தது. காப்பகத்துக்கு வெளியில் உள்ள கோவிலில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.இதை தொடர்ந்து காப்பக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.நவம்பர் 1-ந்தேதி தொடங்கும் விண்ணப்பபதிவு 11-ந்தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தற்போது 2, 3 மற்றும் 4-ம் […]
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயார் செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.இங்கு எல்.வி.எம்.3-எம்.3 திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சீ.இ-20 சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை 25 […]
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை நிறுத்தப்பட்டு இருந்த கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை […]
இந்தியாவில் அடிக்கடி பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது கோழிகள் பாதிக்கப்படுவதுடன் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து விடும்.இந்த நிலையில் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1800 வாத்துகள் திடீரென இறந்தன. வாத்துக்கள் ஒரே நேரத்தில் இருந்ததால் கால்நடை பராமரிப்பு துறையினர் அதன் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனை முடிவில் […]
சென்னையில் அக்டோபர் 4-ம் தேதி நடந்த தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.இந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் , பா.ஜனதா கட்சியை சேர்ந்த நடிகைகள் குஷ்பு , நமீதா, காயத்ரி , கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து நடிகை குஷ்பு […]
சென்னையை சேர்ந்த மகேந்திரனும்(வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவும்(36) குடும்பத் தகராறு காரணமாக மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர்.தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்எம்.பில் வரை படித்துள்ள […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
