• June 8, 2025
செய்திகள்

பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக, கல்லூரி முதல்வர் அப்பாஸ் மாதிரி உத்தரவின் பேரிலும், அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வழிகாட்டலின் படியும் “பெண் குழந்தையைக்காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார். பெண்குழந்தைகள் பாதுகாப்பு முறை குறித்தும், பெண்கல்வி கற்பதின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, […]

தூத்துக்குடி

80 வயது தந்தையை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன் விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48). சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலைமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அதன்பிறகு அவர் சென்னைக்கு செல்லாமல் பெற்றோருடன் தங்கி இருந்தார். ‘நேற்று முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக தாயார் ரோஜாவுக்கும், மகன் சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுஇதில் […]

செய்திகள்

13-ந்தேதி பள்ளிகள் திறப்பு: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆகலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-2 ஆண்டுகளுக்கு […]

கோவில்பட்டி

பராமரிப்பு பணி: கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதுஎனவே, கோவில்பட்டி சிட்கோ உப மின் நிலையத்தின், ஸ்டாலின் காலனி, எட்டையபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு முத்து மாரியம்மன் கோவில் வரை, மந்தித்தோப்பு ரோடு (பாம்பே ஸ்வீட்ஸ் வரை), வக்கீல் தெரு ஆகிய பகுதிகளுக்கும்,சன்னது […]

செய்திகள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றம்

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20-ம் கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் செயல்படும். அதற்கான முழு […]

செய்திகள்

திற்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

திற்பரப்பு அருவி- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இந்த அருவி குமரி குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக வரலாற்று நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் […]

கோவில்பட்டி

1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (7.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இனாம்மணியாச்சி கல்லறைத் தோட்டம் அருகே இனாம்மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுந்தரபாண்டியன் (வயது 33) என்பவர் பிடிபட்டார்.அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே சுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 480 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: சர்ப்ப காவடி, பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 12ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா 11.6.2022 முதல் 13.6.2022 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.இத்திருவிழாவிற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை […]

செய்திகள்

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை

கோவில்பட்டி, கதிரேசன் கோவில் ரோட்டில் வசிக்கும் கோவிந்தராஜன் என்பவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் ஸ்கேன் மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் இந்த நிறுவனம், செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை தொடங்கி உள்ளது.முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. […]

செய்திகள்

கல்லூரி மாணவி அடித்துக்கொலை; ஒருதலைக்காதலால் வாலிபர் ஆத்திரம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் நந்தினி, ரோஜா ஆகிய மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார்.முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி,ஏ, தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து […]