நேபாளம் தலைநகர் காட்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான மூன்று தொடர் டி20 போட்டி நடைபெற்றது.’இதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று சாம்பியன் வெற்றிக் கோப்பையை பெற்றது. இத்தொடரின் சிறந்த மட்டையாளர் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த மணிவண்ணன் பெற்றார். […]
திண்டுக்கல் அடுத்த தவசிமடை அருகே உள்ள வாடிபட்டி காலனியை சேர்ந்த வாசிமலை என்பவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த சந்துரு (23). என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்துருவுடன் இருந்த பழக்கத்தை புவனேஸ்வரி தவிர்த்து வந்தார். இதனையடுத்து நேற்று புவனேஸ்வரி வீட்டிற்கு வந்த சந்துரு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார பிரிவினர் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அந்த கடையில் இருந்த குளிர்பானங்கள் காலாவதி ஆனதா? என ஆய்வு செய்த போது அங்கு மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் இருந்ததை […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண், பெண் பக்தர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சேவைகளை மக்கள் மத்தியில் விளக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்,. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொது செயலாளர் சரவணக்குமார்,மற்றும் கிஷோர்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி முன்னாள் […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக சில பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் […]
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார். அவரது உரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜி (எ) தோட்டா ராஜ் (27) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தா அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் ,அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.:-கேள்வி:- .அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதே பதில்:- நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கழகம் என்ன செய்கிறது என்ற அசைவுகளைத்தான் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. புரட்சித்தலைவர் காலத்திலும் சரி,அம்மா காலத்திலும் சரி.அந்த எதிர்பார்ப்புகளை கழகம் நிறைவேற்றியது. ஒட்டுமொத்தமாக இந்த விடியாத […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த நம்பி (வயது 49). இவர் ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு ரூ. 2,50,000- ஐ வட்டிக்கு கடனாக கொடுத்து இருக்கிறார். பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரித்து கடந்த 9.6.2022 அன்று நம்பியை கைது செய்தனர். பின்னர் […]