மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணி `சாம்பியன்’

நேபாளம் தலைநகர் காட்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான மூன்று தொடர் டி20 போட்டி நடைபெற்றது.’
இதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று சாம்பியன் வெற்றிக் கோப்பையை பெற்றது. இத்தொடரின் சிறந்த மட்டையாளர் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த மணிவண்ணன் பெற்றார். சிறந்த தடுப்பாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது பெற்றார். வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் பெற்றார்.
இந்திய மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு நேபாளம் நாட்டின் சர்வதேச வீல்சேர் கிரிக்கெட் சங்க தலைவர் சுதீன் சர்பால் பரிசுகளை வழங்கினார்.
