கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் தெற்கு திட்டங்குளம் ஊர் எல்லையில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது எட்டயபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணகட்டை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார்சைக்கிளில் 3 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தாப்பாத்தி கிராமத்திலுள்ள ராமசாமி மனைவி சண்முகத்தாயிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் தாப்பாத்தி […]
தமிழகத்தில் 10 ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.*10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம்*பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 97.27 […]
அ.தி.மு.க ஒற்றை தலைமை சுமுகமாக முடியும்- பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 23 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு கூட்டம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 11 பேர் கொண்ட குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் 18 ம் தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் […]
2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20- ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. […]
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார். பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் (Cyber Supporting Officer) அடங்கிய குழுவினரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெறுவது குறித்தும், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எல். பாலாஜி சரவணன் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.வருகிற 23-ந் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு பற்றி ஆலோசிக்க கூடிய இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதே கருத்தை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலோர் வலியுறுத்தி பேசினார்கள்.இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 950 கி.மீ நீள கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடைவிதித்து வருகிறது.நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காலம் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுழற்சி முறையில் 130 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இரவு 9 […]
கோவில்பட்டி அருகே எம்.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 2௦ ஆண்டுகளுக்கு முன்பு இவரது நிலத்தை கண்மாய் அமைப்பதற்கு கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு அரசு தரப்பில் இருந்து நஷ்ட ஈடு இன்னும் தரப்படவில்லையாம். இதனால் சண்முகம் இன்று காலை தனது மனைவி மற்றும் பள்ளிமாணவனான மகனுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.கையகப்படுத்திய நிலத்துக்கு நஷ்டஈடு வேண்டி கையில் 3 பேரும் தட்டு ஏந்தி தரையில் அமர்ந்து இருந்தனர். இது பற்றி அறிந்த கோட்டாட்சியர் மகாலட்சுமி, அவர்கள் […]