• June 8, 2025
தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமன்றம் அருகே மகனை வெட்டிக்கொன்ற தந்தை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்ணகிரியை சேர்ந்தவர் தமிழகன்(வயது 57) இன்று காலை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார்.அப்போது, அங்கு மறைந்திருந்து அவரது மகன் காசிராஜன்(36) தந்தையை அரிவாளால் வெட்ட முற்பட்டபோது தந்தை தமிழழகன் அரிவாளை பறித்து மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்தார்மேலும், தமிழழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா? பின்னணியில் பகீர் தகவல்கள்…

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதை தொடர்ந்து ஒருங்கிணப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் நேரடியாக சவால் விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே 23-ந் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருக்கிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரே ஒருங்கிணைப்பாளராக […]

செய்திகள்

27-ந் தேதி முதல் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது

ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இதுவும் ஒன்றாகும்.தற்போது தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என அனைத்து மாவட்ட மக்களும், தென்மாவட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர்இந்நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.அதன்படி வருகிற 27-ந் தேதி முதல் திங்கள், புதன், […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நேற்று ஒ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர்.இதேபோல எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.அதே […]

செய்திகள்

கனிமொழி எம்.பி.க்கு கொரோனா

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுகொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள்ளார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோடு உள்பட 5 இடங்களில் ஒரு வாரத்தில் 2-வது முறை மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு தடவை பகுதிவாரியாக ,மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. காலையில் இருந்து மாலை வரை மின் தடை செய்யாமல் எந்த பணி நடக்கும் இடத்தில் மட்டும் மின்தடை செய்துவிட்டு பணி முடிந்தவுடன் மின் சப்ளை கொடுத்து விட முடியும். அனால் மின்வாரிய அதிகாரிகள் அப்படி செய்வது கிடையாது.கடந்த வெள்ளிக்கிழமை (17.6.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின் நிலையங்களில் இருந்து […]

செய்திகள்

அ. தி. மு. க. வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் விரைவில் சுமுக

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பகலில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :- கேள்வி:-அதிமுக வில் ஒற்றைத் தலைமை குறித்து…. பதில்: காலத்தின் கட்டாயம். அதாவது காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். பொதுவாக அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர்களின் எண்ணம் ஒற்றைத் தலைமை என்ற கருத்துள்ளது. அது தற்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான […]

ஆன்மிகம்

குரு பகவான் – தட்சிணாமூர்த்தி வேறுபாடு

தட்சிணாமூர்த்தி என்பவர் யார், குரு பகவான் என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட உத்தரவு

தூத்துக்குடியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன,அதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தெற்கிலிருந்து வரும் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்துதான் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்கின்றன.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து வந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 தேர்தல்: வேட்புமனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம ஊராட்சி தலைவர் பதவி மற்றும் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) […]