• June 7, 2025

27-ந் தேதி முதல் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது

 27-ந் தேதி முதல் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது

ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இதுவும் ஒன்றாகும்.
தற்போது தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என அனைத்து மாவட்ட மக்களும், தென்மாவட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர்
இந்நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27-ந் தேதி முதல் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும். இதையடுத்து மறுநாள் காலை 4.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. இதேபோன்று கன்னியாகுமரியிலிருந்து வருகிற 28-ந் தேதி முதல் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து இரவு 10.15 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணி அளவில் இந்த ரெயில் ராமேசுவரம் சென்று அடைகிறது.
ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இதே வழியில் கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் சென்றடைகிறது.
இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் இரவு 12.23 மணியளவிலும், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் இரவு 1.28 மணியளவிலும் விருதுநகர் வந்து செல்கிறது. விருதுநகர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *