தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29.6.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய […]
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட தபால் நிலையங்களின் முதுநிலை சூப்பிரண்டு மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-மாநில அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள், வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 3௦ வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோவிட்-19 தோற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.எனவே, நாளை25ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம். துரைசாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளுக்கும். பசுவந்தனை உபமின்நிலையத்தில் […]
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்தும், இந்த திட்டத்தில் ஆண்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு […]
கோழி இறைச்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோழியின் ஒவ்வொரு பாகங்களிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. கோழியின் மார்பகத்தில் உள்ள இறைச்சியில் 28 கிராமுக்கு 1 கிராம் கொழுப்பு தான் உள்ளது. அதேபோல கோழியின் கால்களில் ஒவ்வொரு 28 கிராமுக்கும் 2 கிராம் கொழுப்பு உள்ளது. கோழியை சமைக்க முடிவு செய்வதற்கு முன், யாருக்கு […]
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில் 38,114 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், துறைசார்ந்த சர்வே திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள். […]
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ஆண்டிச்சாமி (வயது 24).இவர் கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று பாலியல் தொல்லை செய்ததாக கைதானார்.வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். ஆண்டிச்சாமிக்கு 13 […]
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ‘விக்ரம்’ படம் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளி திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதை தொடர்ந்து திருமூர்த்தியை நேரில் அழைத்து கமல் பாராட்டினார். மேலும் […]
ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்தந்த ஊர்களை சார்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ரெயில்வே நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் சார்பில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். கோவில்பட்டி கொண்டல்சாமி, விருதுநகர் வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரி மகாராஜ்சிங் மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக “திராவிட மாடல்பயிற்சி பாசறைக் கூட்டங்கள்” நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை […]