ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்கலாம்

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட தபால் நிலையங்களின் முதுநிலை சூப்பிரண்டு மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாநில அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள், வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 3௦ வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 தோற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விளக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வரும் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக , ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், “இந்தியா போஸ்ட் பெமேண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி , டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.7௦ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்,
எனவே மாநில அரசு ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
