• June 6, 2025

கோவில்பட்டி கோட்டத்தில், 25ந்தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள்

 கோவில்பட்டி கோட்டத்தில், 25ந்தேதி  மின்தடை செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.
எனவே, நாளை25ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம். துரைசாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளுக்கும். பசுவந்தனை உபமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் நாகம்பட்டி, சில்லாங்குளம் ஆகிய பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல எட்டையாபுரம் உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆர். வெங்கடேஸ்வர புரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *