தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் (39) என்பவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 29.6.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோன்று அன்றைய தினமே பிரையண்ட் நகர் 3-வது தெருவில் பரமேஸ்வரன் (54) என்பவரின் மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம், ரூ 2,000 ஆயிரம் […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32), சார்லஸ் (32), மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த […]
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. முஹம்மது முஸ்தபா வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக ஜனாப் முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் […]
ஐக்கிய அரபு அமீரகம் அரசு, இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவை சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு-அம்மாள்பட்டி இடையே அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் புதுக்கோட்டை, தெற்கு மயிலோடை, கைலாசபுரம், கலப்பைபட்டி, அம்மாள்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர்.இவர்கள் கயத்தாறு சென்று அங்கிருந்து திருநெல்வேலி , கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் கயத்தாறில் இருந்து அம்மாள்பட்டி டவுன்பஸ்சில் தங்கள் ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.இந்த வகையில் நேற்று மாலை 6.30 மணிக்கு கயத்தாறில் இருந்து சென்ற […]
கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருக்கும் 500-க்கும் மேற்பட்ட வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 2013 -ஆம் ஆண்டு ஜூலை 4-ந்தேதியும், 2014-ஆம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதியும் கோவில்பட்டி தாலுகா அலுவலகம், உதவி- கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.இந்த மனு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தகுதி அடிப்படையில் […]
நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன் கூறி இருப்பதாவது:-சில நாட்களாக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பி.சி.ஓ.எஸ். என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்பும் காணப்படுகிறது. (இந்த பாதிப்பு பொதுவாக, சீரற்ற மாதவிடாய், முகம், உடல் பகுதிகளில் முடி அதிகம் வளர்தல் மற்றும் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்) இதுபோக வேறு சில தீராத உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த கூடிய ஆபத்தும் உள்ளது. மேலும் […]
மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், தமிழில் ‘கனா கண்டேன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பாரிஜாதம்’, ‘மொழி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட பிருத்விராஜ், நடிப்பில் ‘கடுவா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை பிருத்விராஜ் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-“தமிழில் நான் நடித்த சில படங்கள் இனிமையான […]
ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல; எடப்பாடி பழனிசாமி பதிலடி
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார், அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கும்.தங்களின் 29.6.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது.கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.ஆதலால் அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்ட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற […]
சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இதில் தலையிட முடியாது என கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை […]