• June 11, 2025
சினிமா

தேசிய விருது : சூர்யாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

செய்திகள்

14 மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் […]

சிறுகதை

ஆழ்குழாய் கிணறும்…குழந்தையும் (சிறுகதை)

குழந்தை ரமேசுக்கு அன்று மூன்றாவது பிறந்த நாள்… கணேசனும் கனகாவும் தங்கள் மகனின் பிறந்தநாளை காலையில் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.உறவினர்கள் புடை சூழ ஹேப்பி பர்த்டே டூயூ என்று பாட்டுபாடி கேக் வெட்டினார்கள்.குழந்தை ரமேசுக்கு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டிருந்தார்கள் அவன்.தலையில்தொப்பி மாட்டியிருந்தார்கள். அவன் கேக் வெட்டுவது போல் படம் எடுக்க அவன் கையில் சின்ன கத்தியை கொடுத்து போஸ் கொடுக்க சொன்னார்கள்.அவன் கேக்கை எடுப்பதிலே குறியாக இருந்தான்.அங்கும் இங்கும் தலையை ஆட்டினான். கணேசன் தன்மகனின் கையைபிடித்துகத்தியால் […]

செய்திகள்

மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம்: என் மகளின் மரணத்தில் நீதி கிடைக்கும் –

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் ரூ.74 கோடி நிவாரண பொருட்கள்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் கப்பல் மூலம் அரிசி, பால் பவுடர் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலின் மூலமாக ரூ.54 கோடி மதிப்பிலான 16356 டன் அரிசி, […]

கோவில்பட்டி

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நீதி விசாரணை நடத்தக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தக்கோரி அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,தாலுகா அலுவலகம் எதிரே இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் (சி,பி.ஐ.- எம்.எல்.) தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி மாவட்ட இலம்புலிகள் அணி செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார்.தமிழ்புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் வில்லிசெரி முருகேசன், ஒன்றிய நிதி […]

மருத்துவம்

சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி. பரிசோதனை

ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும். பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும் பரிசோதனை செய்யும் நேரத்தை பொருத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும்.சாப்பிடுவதற்கு முன் 12௦ மில்லி கிராமுக்கு கீழும், சாப்பிட்ட பின் 16௦ மில்லி கிராமுக்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமஒரு நாளில் மூன்று முறையும் மாதத்தில் 9௦ முறையும் சர்க்கரை அளவு ஏறி இறங்குகிறது. இந்த நிலையில் […]

கோவில்பட்டி

பாகுபாடு இன்றி 1௦௦ நாள் வேலை: இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிளை செயலாளர் இன்னாசி முத்து தலைமை தாங்கினார்.தாலுகா செயலாளர் பாபு, உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ,மாவட்ட குழு பரமராஜ், சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*100 நாள் வேலைத்திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை வழங்கவேண்டும். இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.*பெரியகுளம் கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு […]

சிறுகதை

மர்ம சூட்கேஸ் …சிறுகதை

பரபரப்பாக காணப்பட்டது அந்த போலீஸ் நிலையம்.இரவு ஒன்பது மணி.வாலிபர் கனக சபையை போலீசார் அவர்களது பாணியில் விசாரித்து கொண்டிருந்தனர். அவன் உடலில் போலீசாரின் பிரம்பு விளையாடியது.ரத்தம் கொட்டியது. உண்மையை சொல் …நகையை எடுத்தது நீதானே…எங்கே வச்சிருக்கே சொல். என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.அவன் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்பாவி. என்னை விட்டுருங்க என்று கெஞ்சினான்.போலீசார் விடவில்லை.ஏய்…பொய் சொல்லாதே…அடிவாங்கி செத்து போவ..சொல்லு…உன் கூட்டாளி யாரு…அவன் எங்கே இருக்கான் சொல்லு என்று பல்வேறு வார்த்தைகளால் துளைத்தனர்.அவன் ..எனக்கும் எதுவும் […]

சிறுகதை

இன்னொரு தாய் …(சிறுகதை)

காலை 8மணி. நெல்லை சந்திப்பில் நின்ற அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டது. ரெயில் சிக் புக் சிக்புக் என்று நகர்ந்தபோது கையில் பன்னுடன் பிளாட்பாரத்தில் சிறுமி…அம்மா அம்மா என்று அழுது கொண்டே ஓடிவந்தாள்..அந்த சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையில் வைத்திருந்த பன்னை சாப்பிடாமல் அங்கும் இங்கும் தேடியது.பின்னர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்து தண்டவாளத்தையே பார்த்து கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அடுத்த பதினைந்து நிமிடத்தில் […]