• June 15, 2025
செய்திகள்

அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு பரபரப்பு வாதம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை […]

செய்திகள்

மருத்துவ சிகிச்சை:ராஜாத்தி அம்மாள் நாளை ஜெர்மனி பயணம்; கனிமொழி உடன் செல்கிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார்.கருணாநிதி மறைவுக்கு பிறகு ராஜாத்தி அம்மாள் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. அவரால் சரிவர சாப்பிட முடியாத அளவுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது.வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அவ்வப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்து வந்தது.இதனால் ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை […]

தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமியை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள்

தூத்துக்குடி நகரில் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.அதில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் கீழ் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர் உள்ளிட்டவர்களை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்ற தலைப்பிலான இந்த சுவரொட்டியில் குடிப்பிடப்பட்டிருந்த வாசகம் விவரம் வருமாறு:-இது வேதாந்தாவின் கார்ப்பரேட் கொள்ளைக்காக அரசு நடத்திய வன்முறை!அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை!தமிழ்நாடு அரசே!குற்றவாளியான எடப்பாடி பழனிசாமி, போலீசு உயரதிகாரிகள், கலெக்டர், […]

தூத்துக்குடி

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்; தூத்துக்குடியில் 26-ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 26.8.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை […]

செய்திகள்

எம்.ஜி.ஆர். ஆலய மகா கும்பாபிஷேகம்; சைதை துரைசாமி, ஏ.சி சண்முகம், ஐசரி கணேஷ்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆலயம் அமைத்து அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் கலைவாணன் குடும்பத்தினர் முயற்சியில் எம்.ஜி.ஆரை நேசிக்கும் அவரது தொண்டர்கள் பக்தர்கள் ஒத்துழைப்பில் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவானது.தற்போது இந்த ஆலயத்தின் நுழைவாயில் திருக்கோபுரம் அமைக்கப்பட்டு ஆலயத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். திருஉருவ சிலை கர்ப்ப கிரகத்தில் நிறுவப்பட்டு இதற்கான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதிஉலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் […]

செய்திகள்

தி.மு.க. மட்டும் தான் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் – சுப்ரீம் கோர்ட்டு

இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இன்றைய விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற […]

செய்திகள்

அ.தி.மு.க, பொதுக்குழு வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். \இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட […]

செய்திகள்

போலீஸ் பண்டகசாலையில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

திண்டுக்கல்லில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் பண்டகசாலையில் விற்கப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். இலவச பஸ் வசதி. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள்

கொடைக்கானல் அருகே, சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

குஜராத் மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் வழியாக சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை அதே பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.கொடைகானல் மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பஸ் பள்ளத்தில் அடிப்பகுதிக்கு செல்லாமல் மரங்களுக்கு […]