போலீஸ் பண்டகசாலையில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

திண்டுக்கல்லில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் போலீஸ் பண்டகசாலையில் விற்கப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். இலவச பஸ் வசதி. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
