நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6-ம் […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்; தூத்துக்குடியில் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் விதமாக தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து தேர்வில் வெற்றி பெறுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர், தாங்கள் படித்து வெற்றி பெற்றது […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூர் பச்சாபாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இந்த தம்பதியின் மகள் தீக்ஷனா தாராபுரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருச்செந்தூர், திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு சென்றுள்ளார். அவர்கள் மூவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து நாகராஜ் […]
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்ல தம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நல்லதம்பி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் ஒன்று […]
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மதுரையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்த போது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலரான எனது உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-1-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம், தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 12-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டினை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. […]
மாவட்டங்களுக்கு இடையேயான சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி மே 4(நாளை) முதல் 8 வரை ஆக்கி யூனிட் ஆப் புதுக்கோட்டை சார்பாக புதுக்கோட்டை பெண்கள் விளையாட்டு விடுதி ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 28 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணிக்கான தேர்வு கடந்த மாதம் 29ஆம் தேதி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பயிற்சி […]
சென்னையில் இருப்பதை விடவும், மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள்; அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து \முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க […]
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புனலூர் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ரெயில் நிலையத்திற்கு வந்தனர். குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், புனலூர் நிலையத்தை வந்தடைந்த உடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து […]