விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம மனிதர்கள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவரை கொலை செய்தவர்கள் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் விளையட்டு விழா நடைபெற்றது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நான்காம் ஆண்டு எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி அஞ்சலி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார். இந்திய கப்பற்படை அகாடமியின் பயிற்சி அலுவலர் மற்றும் தேசிய பளு தூக்கும் வீரர் கண்ணுடையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றி […]
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 306 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 282 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்கள் ஆய்வு கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 21 வாகனங்களில் பல்வேறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் […]
கோவில்பட்டி நாடார் ஜவுளி ரெடிமேட் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் ரவிக்குமார் , வெயில் முத்து ஆகியோரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்டம் முன்னாள் ரெயில்வே ஆலோசனைக் குழு […]
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி முத்துக்கருப்பி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை […]
நடிகர் பெஞ்சமின் வெற்றி கொடிகட்டு, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:- சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறுதலான செய்திகளைப் போட்டு இருக்கிறார்கள். என்னுடைய புகழை கலங்கப்படுத்துவதற்காக போட்டிருக்கிறார்கள். இது நான்காவது முறை. […]
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே […]
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே உள்ள சுபா நகர் மெயின் ரோட்டில் ஆஸ்கார் அறிவியல் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னோடி ஹோட்டல் மேலாண்மை திட்டத்தில் தொடங்கி, உயர்தர கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் இக்கல்வி நிறுவனத்தில் . தொழில் சார்ந்த படிப்புகள் ஏராளம் உள்ளன.இங்கு படித்து முடித்தவுடன் நிச்சய வேலை என்பதே இந்த கல்வி நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆஸ்கார் வழங்கும் படிப்புகள் விவரம் வருமாறு:- 1)கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் […]
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் […]