• June 13, 2025

Month: March 2025

சினிமா

அட்லியுடன் இணையும் அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது திரையுலகில் 22 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு ராகவேந்திர ராவ் இயக்கத்தில் வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அல்லு அர்ஜுன். அதனைத்தொடர்ந்து, ஆர்யா, பருகு, பன்னி, ஜூலாய், ரேஸ் குர்ரம், S/o சத்யமூர்த்தி, சர்ரைனோடு, அல வைகுந்தபுரமுலு, மற்றும் புஷ்பா ஆகியவை அல்லு அர்ஜுனின் கெரியரில் சிறந்த படங்களாக அமைந்தன. தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த […]

சினிமா

‘பராசக்தி’ படத்தில் ‘விஸ்வாசம்’ நடிகை

டூரிங் டாக்கீஸ்’, ‘ஓய்’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘பைரவா’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்களில் நடித்தவர், பாப்ரி கோஷ். தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் இவர் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக புகைப்படத்தை பகிர்ந்த பாப்ரி கோஷ், சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் […]

செய்திகள்

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்:மனித உரிமைகள் ஆணைய உத்தரவை உயர்

கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனை விசாரித்த ஆணையம், இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு […]

செய்திகள்

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்;த.வெ.க.பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம்.அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். உங்கள் அரசியல் சம்பாதிக்கும் அரசியல். நாங்கள் ஊழல் செய்து லண்டன் சென்று ஊழல் பணத்தை செலவு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமானங்களின் கால அட்டவணை

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை  30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக்.25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமானங்களின்  கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

கோவில்பட்டி

பெண்ணை பலாத்காரம் செய்து 10 பவுன் நகை பறித்தவர், உடந்தையாக இருந்த கார்

கோவில்பட்டியை அடுத்த  பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா இமானுவேல் (59). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் தன்னை கிறிஸ்தவ பாதிரியார் எனக் கூறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி வந்தார். அந்த கூட்டங்களுக்கு வரும் இளம்பெண்களை சிறப்பு பிரார்த்தனை என்ற பெயரில் வெளியூர்களுக்கு காரில் அழைத்துச் சென்றார். கடந்த 25.8.2016 அன்று 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் எனக் கூறி மதுரைக்கு காரில் அழைத்துச் சென்றார். அங்கு […]

கோவில்பட்டி

விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள்

மத்திய ரெயில்வே நிர்வாகம், கோடை விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கன்னியாகுமரி இடையே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபற்றி மத்திய ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து ஏப்ரல் 9-ந் தேதி முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாராந்திர சிறப்பு ரெயில் புதன்கிழமைதோறும் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்  வியாழக்கிழமை மதியம் 1.15 மணிக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் அபாயம்

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான வாடகை ஒப்பந்தம் ஆகஸ்டு  31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் […]