கோவில்பட்டி சிறுவன் வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டியில் கடந்த 9ம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. […]
தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’:முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? ஆட்சியர் இளம்பகவத்
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தியாளர்களை […]
கோவில்பட்டியில் இரவு பகலாக மழை பெய்தது இதனால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று தொடர்மழை பெய்தது. கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலையிலும் தொடர்ந்து நீடித்தது. பகல் முழுவதும் மழை நிற்கவில்லை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது. […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75- வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகை சேர்ந்தவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் :எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன். முன்னாள் […]
திருச்சி குண்டூரை சேர்ந்த வசந்தா மாரிகண்ணு (வயது 80 ) என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தார். அங்கிருந்து திருச்சி செல்ல திட்டமிட்டிருந்தார்,. அவர் பயணம் செய்ட ஆட்டோவை தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் சாமியார் தோட்டத்தை சேர்ந்த கணேசன் ஓட்டிசென்றார். குரோம்பேட்டை ஹவுசிங் போர்டு காலனி சாலை பச்சைமலை […]
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜீவா இல்லத்தில் ஏஐடியுசி இளையரசனேந்தல் ரோடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பாக நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது டிசம்பர் 26 தேதி நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியில் சிறப்பாக நடத்துவது பற்றியும்,சங்க செயல்பாடுகள், அமைப்பு முறை பற்றியும் ஆலோசனை நடைபெற்றது, கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.,ஏஐடியுசி பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் பரமராஜ் விளக்க உரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணைச் செயலாளர் அலாவுதீன், இளைஞர் […]
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன்பின்னர், […]
வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்: மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் திறந்து வைத்தனர்
கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் உள்ளது. அந்த கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து சென்றால் அது தீட்டு என்றும், எனவே அவர்கள் அங்கு செல்லவே கூடாது என்றும் தடை இருந்தது. அந்த தடையை உடைப்பதற்காக 1924-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம். பெரியார் அங்கு சென்று நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை நினைவுபடுத்தும் […]
தொடர்மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த […]
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் சிறப்புக்குரியது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான விசேஷமான மாதம் தான். ஆனால் இந்த வருட பரணி தீபம், கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை சிவபெருமானின் விசேஷச நாளான பிரதோஷத்துடன் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பினை தருகிறது. இப்படியான இந்த மாதத்தில் கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றப்படும் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும்?, ஏற்றும்போது நாம் […]