சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி மதிப்பில் முதல்வர் பதிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்துவோம். இது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது. அவரது உயிரை பறித்துவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட […]
கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்தியில் தற்போது ‘பேபி ஜான் என்ற பெயரில் உருவாகி வருகிறது. அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து “பேபி ஜான்” படத்தை தயாரித்துள்ளன. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த […]
சென்னை கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கொளத்தூரில் உள்ள ஜெகன்நாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பகத்தில் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்கு தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், […]
ஐரோப்பிய நாடான ஸ்பெயின், 5 நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையில் தத்தளித்து வருகிறது. குறிப்பாக வேலன்சியா மாகாணம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு மட்டும் 217 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்க நினைத்து பார்க்க முடியாத இயற்கை சீற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ்டில்லா லா மஞ்ச்சா, அன்டாலுசியா ஆகிய மாகாணங்களை காட்டிலும் வேலன்சியா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகள், […]
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மற்றும் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து கொண்டாடி விட்டு மீண்டும் ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்காக வந்தவர்கள் விடுமுறை முடிந்து ஞாயிற்றுகிழமை கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.. இதனால் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் […]
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் விருத்திமான் சஹா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார். விருத்திமான் சஹா தற்போது ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், விருத்திமான் சஹா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக […]
*திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்; இல்வாழ்க்கை இனிமையாக இருக்கும். *திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும். * திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும். *. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம். * திருத்தணிகை […]
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார். கால பைரவர் வழிபாடு :பைரவரை பிரார்த்தனை செய்து, உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும், பைரவருக்கு விளக்கு ஏற்ற வேண்டும். ஆலய திருநடை திறந்திருக்கும் பைரவருக்கு மட்டும் தான் விளக்கு ஏற்ற வேண்டும், கண்டிப்பாக பைரவர் […]
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பணியாற்றி வந்தவர்கள், மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். நேற்றுடன் 4 நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில், பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு மற்றும் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. […]
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள் தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், […]