• June 8, 2025

தீபாவளி விடுமுறை கூட்ட நெரிசல்: கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்குள் வந்து சென்ற பஸ்கள்

 தீபாவளி விடுமுறை கூட்ட நெரிசல்: கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்குள் வந்து சென்ற பஸ்கள்

திருநெல்வேலி பகுதியில் இருந்து வந்த பஸ்கள் ம கூடுதல் பஸ் நிலையத்துக்குள் செல்லும் வழியில் போலீசார் வழிமறித்து நின்றனர்.

கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியே வந்த பஸ்சில் பயணிகள் ஏறிய காட்சி.

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மற்றும் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர்‌‌ தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து கொண்டாடி விட்டு மீண்டும் ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்காக வந்தவர்கள்  விடுமுறை முடிந்து ஞாயிற்றுகிழமை கோவில்பட்டியில் இருந்து  புறப்பட்டு சென்றனர்.. இதனால் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

வழக்கமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்லாமல் வெளியில் நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்கி செல்வார்கள்/ ஆனால் ஞாயிற்றுகிழமை தீபாவளி முடிந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் வசதிக்காக  பஸ் நிலையத்துக்குள் அணைத்து பஸ்களும் சென்று திரும்ப போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பஸ்களை சாலையில் நிற்க விடமால், பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் படி கூறியது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி மூலமாக அறிவித்தது போக்குவரத்தினை சரி செய்தனர்.

.தனியார் பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்தந்த பஸ்களின் நிறுத்தங்களில் இருந்து ஏறி சென்றனர். அரசு பஸ்களை நம்பியவர்கள் சென்னை கோவை திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கோவில்பட்டி நகரிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் குறைவு என்பதால், நாகர்கோவில் கன்னியாகுமரி நெல்லை பகுதியிலிருந்து இயக்கப்படும் பஸ்களை நம்பித்தான் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.

அங்கிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் ஏற முடியாமல் பரிதவித்தனர். சிலர் கோவில்பட்டி பணிமனையில் இயக்கப்படும் பஸ்களில் ஏறுவதற்காக அந்த பணிமனை வாசலில் நின்று பஸ்கள் ஏறி இடம் பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் கோவில்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் கோவில்பட்டி நகரிலிருந்து சென்னை திருப்பூர் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடியாக அதிகளவு பஸ்கள் இயக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *