சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவம்ப்ர்.11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரது பதவிக்காலம் மே 13, 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த நிகழ்வில், குடியரசு துணை […]
பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் .மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவர் எதிபாரதவிதமாக குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66 இந்திரா சவுந்தர்ராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். டி.வி.எஸ் நிறுவனத்தில் துணை பொறியாளாராக பணியாற்றிவர். தனது தாயின் பெயரான இந்திராவை , பெயருக்கு முன்னால் சேர்த்து இந்திரா சவுந்தர்ராஜனாக கதைகளை படைத்து […]
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 6-ந் தேதியில் […]
கோவில்பட்டி வட்டத்தில் வரும் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள், குறை நிறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கு முன்னோடியாக கோவில்பட்டி தாலுகாவில் உள்ள குறு வட்டங்களான கோவில்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலையில் வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மனு வழங்கும் நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரியாத நிலை உள்ளதாகவும், முறையாக அறிவிப்பு செய்யாமல், அரைகுறையாக […]
நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் டெல்லி கணேஷ். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 80. சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர […]
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரம் அன்று சதய விழா வெகு விமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதய விழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க […]
சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, பதிரானா மற்றும் தோனி ஆகிய 5 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சிஎஸ்கே அணியின் ரூ.65 கோடி பர்ஸ் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனால் நடக்கவுள்ள மெகா ஏலத்தை ரூ.55 கோடியுடன் சிஎஸ்கே அணி சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில்., ஐபிஎல் தொடரில் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாட விரும்பினாலும், அத்தனை ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அந்த […]
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக பாரம்பரிய கட்டிடமான ரிப்பன் மாளிகை விளங்கி வருகிறது. 1913-ம் ஆண்டு ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது. சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல் சார்ந்த பணிகளும் இந்த ரிப்பன் மாளிகையில்தான் நடைபெறும் என்பது அனைவரும் […]