• June 8, 2025

Month: November 2024

செய்திகள்

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது- ஜெயக்குமார்

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘கள ஆய்வுக் குழு’ ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அக்குழுவுக்கு பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது:- களப்பணிகள் ஆய்வு குழுவை பொறுத்தவரை பல அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. […]

சினிமா

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி: சத்யராஜ் மகள் அதிர்ச்சி போஸ்ட்

நடிகர் சத்யராஜ்-க்கு மகேஸ்வரி என்பவருடன் 1979-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். சிபிராஜ் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வுறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே தற்போது நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஒரு […]

கோவில்பட்டி

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் லைட்டர்கள் உற்பத்தி, விற்பனையை முற்றிலும் தடை வேண்டும்; முதல் அமைச்சரிடம்

விருதுநகரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் தீப்பெட்டி உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள்/ அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.,இந்த் சந்திப்பின் போது முதல் அமைசரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக தீப்பெட்டித் தொழில் உள்ளது. குறிப்பாக இத்தொழிலில் கிராமப்புற பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.கடந்த 8.9.2022 அன்று முதல்வர் அவர்கள் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது மோதிய மினி பஸ்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கபட்டு வருகின்றன. மினி பஸ்கள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது எனபது மறுக்க முடியாத உண்மை எனினும் அடிக்கடி மினி பஸ் டிரைவர்களின் தவறுகள் பேசும் பொருளாகி அவர்களுக்கு கெட்ட பெயரை வாங்கி தந்து விடுகிறது. பயனிகள் கை காட்டும் இடங்களில் எல்லாம்  திடீர் என பஸ்சை நிறுத்துவது என்பது அடிக்கடி நடைபெறும் ஒன்று. இதனால் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல […]

செய்திகள்

நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. இதையடுத்து, தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் […]

செய்திகள்

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த அமெரிக்க பெண்

அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 2,600 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம் என்பதும் சிறு வயதில் கொடுக்கப்படும் தாய்ப்பால் காரணமாக தான் அந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே, குறைந்தது 3 வருடங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆனால் ஒரு சில காரணங்களால் தாய்ப்பால் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில்  15-ந்தேதி  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

,தூத்துக்குடி. கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது                   வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  2024  நவம்பர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை 15.11.2024 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில்.  (

செய்திகள்

தமிழர்களின் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்று கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை அவர் நேற்று சந்தித்தார். அப்போது அனுரா குமார திசநாயகே கூறியதாவது:- […]

ஆன்மிகம்

பதவி உயர்வு, புத்திர பாக்கியம் தரும் ஆண்டார்குப்பம் முருகன்

சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் ஆண்டார்குப்பம் பகுதியில் பழமையும், மகிமையும் வாய்ந்த பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள முருகன் குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்குக் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் தவிர பாம்பன் ஸ்வாமிகள், கிருபானந்த வாரியார் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ‘ஆண்டியர்குப்பம்’ என்றழைக்கப்பட்டு, ‘ஆண்டார்குப்பம்’ […]

சினிமா செய்திகள்

உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டு சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது […]