• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

‘’இந்தியாவுக்காக நடித்தேன்’’ மனம் திறந்த ரிஷப் பண்ட்

கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலக கோப்பையை கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி வென்றது. அத்தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஹன்றி க்ளாஸென் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதனால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது என்பதால் இந்தியா தோற்கும் நிலைக்கு சென்று விட்டது. அப்போது முழங்காலில் லேசான […]

செய்திகள்

’’கொலை வழக்கு ஆதாரங்களை எலி தின்றுவிட்டது” – காவல்துறையை கடுமையாக சாடிய நீதிபதி

மத்திய பிரதேசதம் இந்தூரை சேர்ந்தவர்கள் அன்சார் அகமது-தஹிரா தம்பதியினர். இவர்களுக்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது., தஹிராவை அன்சார் அகமது கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தஹிரா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனையடுத்து அன்சாரை போலீசார் கைது செய்தனர். தற்போது அன்சார் ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் விசாரணை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இதுபற்றிய விசாரணை வந்தபோது துணை காவல் ஆணையாளர் […]

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் […]

செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறது ஜப்பான் அமைப்பு

பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நோபல் பரிசு கடந்த 7-ம் தேதி தொடங்கி மருத்துவம்,இயற்பியல்,வேதியியல் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களின் அமைப்பான `நிஹான் ஹிடான்கியோ’ அமைப்பிற்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போர் நடைபெற்று வந்தபோது […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில்  சிறந்த வீட்டு நூலகத்திற்கு விருது;  முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றார்

தமிழக முதல்வர்  வழிகாட்டுதலில்   நிதிநிலை அறிவிப்பில் விடுகளில் சொந்த நூலகம் அமைத்து  பராமரித்து வருவோருக்கு  2024 ம் ஆண்டு முதல்  அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்  புத்தககண்காட்சியில் மாவட்ட  அளவில் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்க   ஆணையிட்டு உள்ளார். அதன்படி  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மேற்பார்வையில்,  தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர்  மீனாட்சிசுந்தரம்  தலைமையில்   மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாசகர்  ஆகியோர் கொண்ட குழுவினரால் நேரில் ஆய்வு செய்தது.  இதில் […]

செய்திகள்

வெளியானது ‘டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் கதாநாயகனாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. தற்போது பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று […]

செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா

சமீபத்தில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி டி-20 போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 16-ம் தேதி பெங்களூரிலும், அடுத்து 24-ம் தேதி புனேவிலும், கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ம் தேதி […]

செய்திகள்

திருவள்ளூர் அருகே ரெயில்கள் மோதல் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் […]

செய்திகள்

தெலுங்கானா டி.எஸ்.பி.யாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடரில்தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டி-20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இதனையடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,இந்திய வீரர் முகமது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளி பற்றி சர்ச்சை வசனம் : வேட்டையன் திரைப்படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில்  கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து  இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.கோவில்பட்டி நகரை களங்கப்படுத்தும் வகையில் நடைபெறாத சம்பவத்தை நடைபெற்றதாக வேட்டையன் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  முற்றுகை போராட்டம்  கோவில்பட்டி நகர் தொடர்பாக  இடம் பெற்றுள்ள காட்சியை நீக்க வலியுறுத்தியும் , அந்த திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் […]