• June 8, 2025

தெலுங்கானா டி.எஸ்.பி.யாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

 தெலுங்கானா டி.எஸ்.பி.யாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடரில்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டி-20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

இதனையடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்திய வீரர் முகமது சிராஜுக்கு குரூப்-1 அரசு பணி.,ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்த வகையில்,தெலுங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்று கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *