• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

‘ஒற்றை பனைமரம்’ படத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: சீமான்

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது! ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் […]

செய்திகள்

வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்: அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்று கிழமை அன்று இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி (வியாழ கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் நோக்கில் வருகிற ஞாயிற்று கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார் இதன்படி நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய […]

சினிமா

சிறிய படங்களின் வெற்றி திரை துறையை மேலும் ஊக்குவிக்கும்: நடிகர் விமல்

நடிகர் விமல் நடித்த ‘சார்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர். பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.இதனை தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:- `சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி […]

செய்திகள்

ரோகித் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா – பல சாதனைகளை குவித்த ஜிம்பாப்வே

நைரோபியில் நடைபெற்ற ஐசிசி டி20 ஆடவர் 2026 உலக கோப்பை சப் ரீஜனல் ஆப்பிரிக்கா பிரதேச தகுதி சுற்று போட்டியில் காம்பியா-ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பல சாதனைகளை முறியடித்தது. குறிப்பாக சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்து., டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் (35பந்துகள்) அதிவேக சத சாதனையை முறியடித்தார். டெஸ்ட் விளையாடும் நாட்டை சேர்ந்த ஒருவர் அடிக்கும் அதி வேக டி20 சதம் என்ற வரலாறு […]

பொது தகவல்கள்

வாழைப்பழ தோலை தூக்கி எறியும் முன்  சற்று யோசியுங்கள்

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி […]

செய்திகள்

தலைமை செயலக கட்டிடத்தில் விரிசலா? ஊழியர்கள் பதறியடித்து வெளியே வந்தனர்

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் என்று தகவல் பரவியது. இந்த தகவலை அடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்கள் சுமார் 3,000 பேர் பதற்றம் அடைந்தனர். மேலும் பலர் கட்டிடத்தை விட்டு வெளியேறி தலைமை செயலக வளாகத்தில் குவிந்தனர். பின்னர் போலீசார் கட்டிடத்தில் விரிசல் எதுவும் இல்லை. தரை தளத்தில் ஒட்டப்பட்டுள்ள டைல்சில் காற்று புகுந்த காரணத்தால் உடைந்து உள்ளதாகவும், அதனை சரி செய்யும் […]

கோவில்பட்டி

முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி: தங்கம், வெள்ளி பதக்கங்கள்  வென்ற கோவில்பட்டி வீரர்கள்

தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டு போட்டிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக […]

ஆன்மிகம்

சித்தர்கள் வணங்கும் ஸ்ரீபாலாம்பிகை

ஸ்ரீவித்யை ஸ்ரீபாலா மார்க்கத்தை குரு முகமாகவே அடைய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஸ்ரீவாலை ஞான பூஜையின் மகத்துவத்தை போகர் அவருடைய குரு நந்தீசரிடம் இருந்து அறிந்து கொண்டதாக சொல்கிறார். போகர் வாலையின் மகத்துவத்தை கொங்கணர்க்கு சொன்னதாகவும், கொங்கணரும் அவர்தம் சீடர்களுக்கு வாலை பூஜையை விளக்கியதாகவும் சொல்கிறார். இவர்கள் எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலைதான் ஆவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான் என்பதையும் உறுதிப்படுத்துகிறார். ஸ்ரீபாலாம்பிகையின் தரிசனம் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம். அன்பர்களுக்கெல்லாம் ஞானிகளை குருவாக […]

ஆன்மிகம்

ஒவ்வொரு நாளைக்கும் தீப வழிபாடு பலன்கள்

வாரத்தில் ஒவ்வொரு கிழமையில் தீபம் ஏற்றி வழிபட சில கஷ்டங்கள் நம்மைவிட்டு அகலும். எந்த கிழமையில் எப்படி தீபமிட்டு வழிபட்டால் என்ன பலன் என்று நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழு மூலம் விரிவாக பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்களை ஏற்றுதல் மிகவும் விஷேசமாகும். தீபங்களை தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் இந்த தீப வழிபாடுகளுக்கு […]

செய்திகள்

கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து: உயிர்தப்பிய பயணிகள்

கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்ற ஒட்டுநர் ஓட்டி வந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர். பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டதும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை பேருந்திலிருந்து இறங்கும்படி அறிவுறுத்தினார். பேருந்தில் பயணித்த பயணிகள் […]